சங்க இலக்கியம் சங்க இலக்கியம் மொத்த பாடல்களின் எண்ணிக்கை - 2381 மொத்த புலவர் எண்ணிக்கை - 473 அகப்பாடல்கள் - 1862 அகப்புலவர்கள் - 378 அலர்ப்புலவர் என்று அழைக்கப்படுபவர் - உலோச்சனார் தலைமகன் தன் நெஞ்சிற்குக் கூறும் கூற்றினை அதிகம் பாடியவர் - இளங்கீரனார் சங்க நூல்களுக்கு வசனம் எழுதியவர் - ந.சி.கந்தையாபிள்ளை சங்க இலக்கியத்தில் பெண்பாற் புலவர்களின் எண்ணிக்கை - 30 சங்க இலக்கியத்தில் அதிக பாடல்களைப் பாடியவர் - கபிலர் குறுந்தொகையில் பாடிய புலவர்களின் எண்ணிக்கை - 203 கி.பி. 470இல் உருவான சங்கம் - திரமிளசங்கம் சங்க இலக்கியத்தில் வரலாற்றுச் செய்திகள் அதிகம் இடம்பெற்றுள்ள நூல் அகநானூறு சங்க இலக்கியப் புலவர்களின் வரலாற்றுச் செய்திகளை அதிகம் பாடிய புலவர் பரணர் வேம்பும் கடுவும்போல அறிவுரை கூறுவது - வாயுறை வாழ்த்து திணை மயக்கம் அதிகம் இடம்பெற்ற நூல் - அகப்பாடல்களில் அதிகமாக உள்ளுறை பெறும் திணை - மருதம் எத்திசை செல்லினும் அத்திசை சோறே என்றவர் - ஔவையார் (புறநானூறு) உரையாசிரியர்களால் அதிகமாக மேற்கோள் காட்டப்பட்ட சங்க இலக்கிய நூல் குறுந்தொகை செங்கல்லால் கட்டப்பட்ட சிவன் கோயில் பற்றிக்க...
எழுத்தின் வகைகள் எழுத்துகளை முதல் எழுத்து என்றும் சார்பு எழுத்து என்றும் இருவகையாகப் பிரிக்கலாம். மொழிக்கு முதற்காரணமாகவும் பிற எழுத்துகள் தோன்றவும் ஒலிக்கவும் காரணமாக இருக்கும் எழுத்துகள் முதல் எழுத்துகள் எனப்படும். முதல் எழுத்துகளைச் சார்ந்து வரக்கூடிய எழுத்துகளைச் சார்பு எழுத்துகள் என்கிறோம். இதைப் பின் வரும் விளக்கப்படம் எடுத்துக்காட்டுகிறது. முதல் எழுத்துகள் பன்னிரண்டு உயிர் எழுத்துகளும் பதினெட்டு மெய் எழுத்துகளும் முதல் எழுத்துகள் ஆகும். சொற்களை உருவாக்க இவையே அடிப்படையாக இருக்கின்றன. எனவே இவற்றை முதல் எழுத்துகள் என்கிறோம். • உயிர் எழுத்துகளும் அமைப்பு முறையும் தமிழில், அடிப்படை ஒலிகளான அ முதல் ஒள வரை உள்ள ஒலிகளை - எழுத்துகளை உயிர் எழுத்துகள் என்கிறோம். இவை அமைந்துள்ள முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஒள 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 இந்தப் பன்னிரண்டு எழுத்துகளும் இயல்பாகவும் எளிதாகவும் ஒலிக்கக் கூடியனவாக உள்ளன. உயிர் எழுத்தை ஆவி எழுத்து என்றும் குறிப்பிடுவர். ஆவி என்றால் உயிர் என்று பொருள். • மெய் எழுத்துகளும் அமைப்பு முற...
Comments
Post a Comment