Sunday, November 28, 2021

பொதுத் தமிழ் வினாக்கள்

 1.    விருத்தப்பாவால் இயன்ற முதல் காப்பியம்


         அ) பெருங்கதை, ஆ) வளையாபதி, இ) சீவகசிந்தாமணி, ஈ) கம்பராமாயணம்.


 2.    மனம் எனும் கரணத்தை ஒரு பேயாகக் கருதிப் பாடும் சித்தர்?


       அ) பாம்பாட்டிச் சித்தர், ஆ) குதம்பைச் சித்தர், இ) அகப்பேய்ச் சித்தர், 

        ஈ) கடுவெளிச் சித்தர்.


3.  கொற்றவை எனும் நாவலின் ஆசிரியர்?


          அ) ஜெகசிற்பியன், ஆ) பொன்னீலன், இ) கல்கி, ஈ) ஜெயமோகன்


4. சைவ சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கனுள் தலைமை சான்ற நூல்


          அ) சிவப்பிரகாசம், ஆ) சிவஞான போதம், இ) சிவஞான சித்தியார், 

            ஈ) இருபா இருபஃது.


5. எல்லீஸ் துரை யாரிடம் தமிழ் பயின்றார்?


          அ) தாண்டவராய முதலியார், ஆ) முத்துச்சாமிப்பிள்ளை, 

           இ) இராமச்சந்திரக் கவிராயர், ஈ) மழைவை மகாலிங்கையர்


6. மு.வரதராசனாரின் இறுதி நாவல் எது?


          அ) கரித்துண்டு, ஆ) அகல்விளக்கு, இ) வாடாமலர், ஈ) கயமை


7. தஞ்சைவாணன் கோவையை இயற்றியவர்?


          அ) அருணந்தி சிவாசாரியார், ஆ) பொய்யாமொழிப் புலவர், 

          இ) சிவஞான சித்தியார், ஈ) மெய்கண்டார்


8. வடமொழி மிருச்சகடிகத்தை மண்ணியல் சிறுதேர் என்ற நாடகமாக மொழிபெயர்த்தவர்.


        அ).மறைமலையடிகள், ஆ) மு.கதிரேசச் செட்டியார், இ) ஆறுமுக நாவலர், 

        ஈ) மு, இராகவையங்கார்.


9. அடிநாவும் அண்ணமும் உறுதலால் பிறக்கும் எழுத்துக்கள்


          அ) க,ங, ஆ) ச,ஞ, இ) ட,ண, ஈ) த, ந.


10. பீரோ என்ற சொல் பின்வரும் அயல் மொழியிலிருந்து நாம் பெற்றது?


          அ) ஆங்கிலம், ஆ) டச்சு, இ) பிரெஞ்சு, ஈ) போர்ச்சுக்கீசியம்


11. பிராகூய் மொழி பின்வரும் பகுதியில் பேசப்படுகிறது?


          அ) இராஜஸ்தான், ஆ) நாகாலாந்து, இ) பலுச்சிஸ்தானம், ஈ) ஒரிசா


12. விசிஷ்டாத்வைத விளக்கம் எழுதிய சான்றோர்?


          அ) சங்கரர், ஆ) இராமாநுசர், இ) திருமூலர், ஈ) இராமலிங்க அடிகளார்.


13. சாமான் என்ற சொல் எம்மொழியைச் சார்ந்தது?


          அ) தமிழ், ஆ) கன்னடம், இ) உருது, ஈ) பாரசீகம்


14. சேர மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த ஆழ்வார்?


          அ) நம்மாழ்வார், ஆ) குலசேகராழ்வார், இ) திருமங்கையாழ்வார், ஈ)  பெரியாழ்வார்


15. கோப்பெருஞ்சோழனுக்கும் அவனுடைய மகன்களுக்கும் பகைமை ஏற்பட்டபோது அது         போராக மூளாதபடி தடுத்த புலவர்


          அ) பிசிராந்தையார், ஆ) புல்லாற்றூர் எயிற்றியினார், இ) மாங்குடி மருதனார், 

           ஈ) ஒளவையார்


16. நாட்டியக் கலையில் சிறப்புப்பெற்ற பெண்கள் இப்பெயரில் அழைக்கப்பட்டனர்?


          அ) கூத்தர், ஆ) பொருநர், இ) விறலியர், ஈ) பாடினியர்


17. ஓர் இடம் குறித்து இருவர் படையும் எதிர்ப்பட்டுப் போர் செய்தல்?


          அ) தும்பை, ஆ) உழிஞை, இ) வஞ்சி, ஈ) காஞ்சி


18. நாலடியார் எனும் நீதிநூலை முழுவதும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்?


          அ) கால்டுவெல், ஆ) இரேனியஸ், இ) ஜி.யூ.போப், ஈ) இராபட்ர்டி நொபிலி


19. பழங்கால நாட்டுப் பாடல்களின் வடிவங்களை நாம் இந்நூலின் வழி அறியலாம்?


          அ) முக்கூடற்பள்ளு, ஆ) முத்தொள்ளாயிரம், இ) சிலப்பதிகாரம், 

            ஈ) பழமொழி நானூறு


20. கழுமலம் என்ற இடத்தில் நடந்த போர் பற்றிக் கூறும் நூல்?


          அ) கார்நாற்பது, ஆ) களவழி நாற்பது, இ) இன்னிலை, ஈ) இன்னா நாற்பது


21. சேரதாண்டவம் என்னும் நாடகத்தை எழுதியவர் யார்?


          அ) வ.சுப. மாணிக்கம், ஆ) சீகன்பால்கு, இ) பாரதிதாசன், ஈ) கவிமணி


22. மனோன்மணீயம் நாடகம் ஒரு


        அ) சமூக நாடகம், ஆ) உரைநடை நாடகம், இ) சீர்திருத்த நாடகம், ஈ) கவிதை நாடகம்


23. லவகுசா நாடகத்தை எழுதியவர்?


          அ) தெ.பொ.மீ., ஆ) மனோகர், இ) சங்கரதாஸ் சுவாமிகள், 

            ஈ) பம்மல் சம்பந்தமுதலியார்          

                              

24. நந்தனார் சரித்திரக் கீர்த்தனை என்பது?


          அ) இசை நாடகம், ஆ) கவிதை நாடகம், இ) படிக்கும் நாடகம், ஈ) வரலாற்று நாடகம்


25. கருக்கு நாவலின் ஆசிரியர்?


          அ) பாமா, ஆ) பூமணி, இ) சிவகாமி, ஈ) லட்சுமி


26. பெருங்கதை சார்ந்த சமயம்?


          அ) சைவம், ஆ) வைணவம், இ) பெளத்தம், ஈ) சமணம்


27. வைணவ வியாக்கியானங்களின் நடை


          அ) தனித்தமிழ், ஆ) கலப்புநடை, இ) மணிப்பிரவாளம், ஈ) தனிநடை


28. மதுரையில் தமிழ்ச்சங்கம் ஒன்றினை ஏற்படுத்திய சமணர்


          அ) உலோச்சனார், ஆ) திருத்தக்கதேவர், இ) வச்சிரநந்தி, ஈ) இளம்போதியார்


29. குரல், துத்தம் எனப்படுபவை?


          அ) பாடல்கள், ஆ) பண்கள், இ) கவிதை, ஈ) விருத்தம்


30. கரிசல் இலக்கியத்தின் முன்னோடி


          அ) சோ.தர்மன், ஆ) பூமணி, இ) கி.ராஜநாராயணன், ஈ) கோணங்கி


31. திருமூலரின் சமாதி உள்ள இடம்


          அ) சிதம்பரம், ஆ) மதுரை, இ) தஞ்சாவூர், ஈ) திருவண்ணாமலை


32. கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோயிலைக் கட்டியவர்?


          அ) இராஜராஜன், ஆ) இராசேந்திரன், இ)பராந்தகன், ஈ) ஆதித்தசோழன்


33. நா. பார்த்தசாரதியின் சாகித்திய அகாடமி விருதுபெற்ற புதினம்


          அ) குறிஞ்சிமலர், ஆ) சமுதாய வீதி, இ) துளசிமாடம், ஈ) வேங்கையின் மைந்தன்.


34. கலம்பகத்திற்குப் புகழ்பெற்றோர்


          அ) வீரமாமுனிவர், ஆ) மீனாட்சிசுந்தரனார், இ) இரட்டையர், ஈ) ஜெயங்கொண்டார்


35. குழவி மருங்கினும் கிழவதாகும் எந்த சிற்றிலக்கியம் தோன்றக் காரணமாயிற்று?


          அ) தூது, ஆ) பிள்ளைத்தமிழ், இ) உலா, ஈ) மடல்


36. யாருடைய காலத்தை உரையாசிரியர் காலம் என்று குறிப்பிடுவர்


          அ) பல்லவர் காலம், ஆ) நாயக்கர் காலம், இ) சோழர் காலம், ஈ) பாண்டியர் காலம்


37. இலக்கியக் கலை நூலின் ஆசிரியர்


          அ) அ.சா.ஞானசம்பந்தன், ஆ)ம.பொ.சி., இ) மு.வ. ஈ) உ.வே.சா.


38. கூடார் மண் கொளல் – எத்திணையைச் சார்ந்தது?


          அ) வெட்சி, ஆ) வஞ்சி, இ) உழிஞை, ஈ) தும்பை.


39. சமணசமயக் காப்பியம் அல்லாததைக் குறிப்பிடுக.


          அ) வளையாபதி, ஆ) குண்டலகேசி, இ) நீலகேசி, ஈ) சூளாமணி


40. நிகண்டுகள் வரிசையில் அடங்காத நூல்


          அ) திவாகரம், ஆ) பிங்கலந்தை, இ) யாப்பருங்கலம், ஈ) கயாதரம்


41. வரலாற்று நாவல்களோடு தொடர்பில்லாத எழுத்தாளர்


          அ) விக்ரமன், ஆ) ஜெகசிற்பியன், இ) அரு.இராமநாதன், ஈ) மு.வரதராசனார்


42. திரிசொற்களால் ஓசை இனிதாகப் புணர்க்கப்படும் செய்யுள் எவ்வனப்பினுள் அடங்கும்?


          அ) இயைபு, ஆ) இழைபு, இ) அழகு, ஈ) அம்மை


43. கம்பராமாயணத்தை உரைநடையில் எழுதியவர்?


          அ) சோமசுந்தர நாயகர், ஆ) தண்டபாணி சுவாமிகள், இ)திருச்சிற்றம்பல தேசிகர், 

            ஈ) விசாகப்பெருமாள் ஐயர்


44. அகிலன் எழுதாத நூல் எது?


          அ) சித்திரப்பாவை, ஆ) கயல்விழி, இ) அக்கினிக்கோபம், ஈ) வெற்றித்திருநகர்


45. நெஞ்சுவிடுதூதின் ஆசிரியர்?


          அ) அருள்நந்தி சிவாச்சாரியார், ஆ) மெய்கண்டார், இ) திருவியலூர் உய்யவந்த                         நாயனார், ஈ) உமாபதிசிவாசாரியார்


46. இந்திய மக்கள் அச்சு இயந்திரங்களைப் பயன்படுத்தும் உரிமை பெற்ற நூற்றாண்டு?


          அ) பதினாறு, ஆ) பதினேழு, இ) பதினெட்டு, ஈ) பத்தொன்பது


47. கால்டுவெல் எழுதிய உரைநடை நூல் எது?


          அ) ஞானக்கோயில், ஆ) இரட்சணிய யாத்திரிகம், இ) இரட்சணிய மனோகரம், 

            ஈ) ஆத்ம நிர்மாணம்.


48. முத்திநூல் என்று போற்றப்படுவது?


          அ) மணிமேகலை, ஆ) சிலப்பதிகாரம், இ) சீவகசிந்தாமணி, ஈ) பெருங்கதை


49. பாக்களுக்குரிய ஓசை எத்தனை என்கிறார் காரிகை ஆசிரியர்?


          அ) 1, ஆ)2, இ) 3, ஈ) 4


50. தென் திராவிட மொழியல்லாத மொழியைக் கண்டறிக?


          அ) குடகு, ஆ) கோண்டி, இ) துளு, ஈ) தோடா


51. மதங்க சூளாமணி என்ற நாடக நாட்டிய நூலின் ஆசிரியர்?


          அ) சி.வை.தா., ஆ) ஆறுமுகநாவலர், இ) விபுலானந்தர், ஈ) கனகசபைப்புலவர்


52. மொழி அமைப்பின் ஆய்வில் அடங்கியுள்ள மூன்று அடிப்படைகளிலிருந்து வேறுபடும்            ஒன்றைத் தருக?


          அ) ஒலியனியல், ஆ) உருபனியல், இ) மரபியல், ஈ) தொடரியல்


53. மயிலை சீனி. வேங்கடசாமி எழுதாத நூல் எது?


          அ) சமணமும் தமிழும், ஆ) சிலம்பும் மேகலையும், இ) கிறித்தவமும் தமிழும், 

            ஈ) பெளத்தமும் தமிழும்.


54. இராமலிங்கரின் அருட்பாவிற்கு மறுப்புத் தெரிவித்து வழக்கிட்டவர் யார்?


          அ) மீனாட்சி சுந்தரம்பிள்ளை, ஆ) ஆறுமுகநாவலர், இ) கோபாலகிருஷ்ணபாரதி, 

            ஈ) முத்துச்சாமிப்பிள்ளை


55. திருப்பள்ளி எழுச்சி சங்ககாலத்தில் எவ்வாறு அழைக்கப்பட்டது?


          அ) துயிலெடை நிலை, ஆ) பூவைநிலை, இ) வெள்ளி நிலை, ஈ) கொடி நிலை


56. வால்மீகி பாடாத, கம்பன் பாடிய படலம் எது?


          அ) அதிகாயன் வதைப்படலம், ஆ) மாயாசனகப் படலம், இ) நாகபாசப் படலம், 

            ஈ) பிரமாத்திரப் படலம்.


57. அந்தாதி முறையில் நூறு பாக்களாகப் பாடப்பட்ட நூல் எது?


          அ) பள்ளு, ஆ) குறவஞ்சி, இ) நந்திக்கலம்பகம், ஈ) தமிழ்விடுதூது.


58. இருதிணை ஐம்பாலுக்கு உரியதாக அன்று, அல்ல என்ற எதிர்மறைச் சொற்களைப்               புதிதாகச் சொன்ன நூலைக் குறிப்பிடுக?


          அ) நேமிநாதம், ஆ) வச்சணந்திமாலை, இ) நன்னூல், ஈ) யாப்பருங்கலம்.


59. வில்லிபுத்தூரார் தன் பாரதத்தை எத்தனை பருவங்களாக வகுத்துள்ளார்?


          அ) 10, ஆ) 12, இ) 30, ஈ) 20


60.கோப்பெரு நற்கிள்ளியிடம் அன்பு கொண்ட பெண்பாற் புலவர் யார்?


          அ) ஒளவையார், ஆ) வெண்ணிக்குயத்தியார், இ) காவற்பெண்டு, ஈ) நக்கண்ணையார்


61.மாதவி கோவலனுக்கு எழுதிய கடிதங்கள் எத்தனை?


          அ) 2, ஆ)3, இ) 4, ஈ) 1


62.ஏறிய மடல்திறம் எத்திணைக்குரியது?


          அ) கைக்கிளை, ஆ) குறிஞ்சி, இ) பெருந்திணை, ஈ) பாலை


63.கூயி மொழி எம்மாநிலத்தில் பேசப்படுகிறது?


          அ) கேரளம், ஆ) ஒரிசா, இ) மைசூர், ஈ) பீஹார்


64.ஈடு என்பது ?


          அ) சிற்றிலக்கியம், ஆ) யாப்பு, இ) பாட்டுவகை, ஈ) நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்.


65.சாவடி என்பது எம்மொழிச் சொல்?


          அ) உருது, ஆ) மராத்தி, இ) பெரிசியன், ஈ) துருக்கி


66. ‘ற’ என்பது என்ன ஒலி?


          அ) அடைப்பொலி, ஆ) மருங்கொலி, இ) வருடொலி, ஈ) ஆடொலி


67.செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணித் தம்பொருள் வழாமல் இசைக்கும் சொல்?


          அ) இயற்சொல், ஆ) திரிசொல், இ) திசைச்சொல், ஈ) வடசொல்.


68.குழூஉக்குறி என்பது எவ்வகை மொழியைச் சார்ந்தது?


          அ) குறுமொழி, ஆ) கிளைமொழி, இ) இலக்கியமொழி, ஈ) பொதுமொழி


69. குடியரசு இதழின் ஆசிரியர் யார்?


          அ) திரு.வி.க., ஆ) பெரியார், இ) பாரதியார், ஈ) கல்கி


70. அகநானூற்றுப் பாடல் ஒன்றினைப் பற்றிய மு.வ. வின் ஆய்வு நூல்?


          அ) கொங்குதேர் வாழ்க்கை, ஆ) கள்ளோ? காவியமோ?, இ) ஓவச்செய்தி, 

            ஈ) கரித்துண்டு.


71.  நீலகேசிக்கு உரை எழுதியவர் யார்?


          அ) அடியார்க்கு நல்லார், ஆ) தெய்வச் சிலையார், இ) சமய திவாகரர், 

            ஈ) சிவஞான முனிவர்


72. பாரகம் அடங்கலும் பசிப்பிணி ஆறுக என்று கூறியவர் யார்?


          அ) மணிமேகலை, ஆ) காயசண்டிகை, இ) ஆதிரை, ஈ) தீவதிலகை


73. சீவகசிந்தாமணி எவ்வகையில் பகுக்கப்பட்டுள்ளது?


          அ) சருக்கம், ஆ) காதை, இ) படலம், ஈ) இலம்பகம்


74. அறத்தொடு நிற்றல் துறையில் அமைந்த பத்துப்பாட்டு நூல் எது?


          அ) முல்லைப்பாட்டு, ஆ) குறிஞ்சிப்பாட்டு, இ) பட்டினப்பாலை, ஈ) நெடுநல்வாடை


75. பெரும்பாணாற்றுப்படையையும், பட்டினப்பாலையும் இயற்றிய புலவர் யார்?


          அ) நக்கீரர், ஆ) கடியலூர் உருத்திரங்கண்ணனார், இ) பெருங்கெளசிகனார், 

           ஈ) நப்பூதனார்


76. பொருநராற்றுப்படையின் பாடலடிகள்?


          அ) 188, ஆ) 269, இ) 248, ஈ) 317


77. மகட்பால் இகல் எனும் துறை இடம்பெற்றுள்ள திணை எது?


          அ) கரந்தை, ஆ) காஞ்சி, இ) உழிஞை, ஈ) தும்பை


78. உள்ளுறையுவமை எத்தனை வகைப்படும்?


          அ) 4, ஆ) 3, இ) 5, ஈ) 8


79. நான்கு அறிவினையுடைய உயிர்?


          அ) கறையான், ஆ) முரள், இ) சிப்பி, ஈ) தும்பி


80. முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின் நஞ்சும் உண்பர் நனிநாகரிகர் – என்று                         குறிப்பிடும் நூல் யாது?


          அ) நற்றிணை, ஆ) புறநானூறு, இ) குறுந்தொகை, ஈ) பரிபாடல்.


81. வியத்தகு செல்வமும் மேம்படும் உள்ளமும் உயர்ச்சி புனைந்துரைக்கும் அணி எது?


          அ) ஆர்வமொழியணி, ஆ) அதிசயவணி, இ) உதாத்தவணி, ஈ) சுவையணி


82. மரபு என்று பெயர் கொண்டு முடியும் தொல்காப்பிய இயல்கள்


          அ) 3, ஆ) 4, இ) 5, ஈ) 2


83. மொழிக்கு இறுதியில் வரும் மெய்கள்


          அ) 18, ஆ) 6, இ) 11, ஈ) 12


84. ஓ என்னும் ஒருமொழிக்குரிய பொருள் யாது?


          அ) எருது, ஆ) நுரை, இ) மதகுநீர் தாங்கும் பலகை, ஈ) மலர்.


85. பயண இலக்கியப் பெருவேந்தர் எனப் பாராட்டப்பட்டவர் யார்?


          அ) ஏ.கே.செட்டியார், ஆ) சோமலெ, இ) மணியன், ஈ) திரு.வி.க.


86. இலக்கியத்தில் பரவி நிற்கும் அழகுத் தன்மையைப் பல நிலைகளில் ஆராய்வது?


          அ) மரபுவழித் திறனாய்வு, ஆ) படைப்பு வழித் திறனாய்வு, இ) முருகியல் முறைத்                 திறனாய்வு, ஈ) விதிமுறைத் திறனாய்வு.


87. முத்துப்பட்டன் கதைப்பாடல் என்பது?


          அ) கவிதை, ஆ) புதுக்கவிதை, இ) சிறுகதை, ஈ) நாட்டுப்புறப்பாடல் இலக்கியம்


88. பக்தியின் மொழி தமிழ் என்று சிறப்பித்துக் கூறியவர்?


          அ) மறைமலையடிகள், ஆ) பரிதிமாற்கலைஞர், இ) தனிநாயகம் அடிகள், 

            ஈ)  சேக்கிழார்


89. வடுகு என்னும் சொல் பின்வரும் மொழிகளுள் ஒன்றினைக் குறிக்கும்?


          அ) தமிழ், ஆ) தெலுங்கு, இ) குடகு, ஈ) கோதம்


90. சுமார் எனும் சொல் எம்மொழியைச் சார்ந்தது?


          அ) போர்ச்சுக்கீசியம், ஆ) தமிழ், இ) தெலுங்கு, ஈ) பாரசீகம்


91. அபிதான சிந்தாமணி என்னும் கலைக்களஞ்சியத்தை உருவாக்கியவர்


          அ) தோலாமொழித்தேவர், ஆ) திருத்தக்க தேவர், இ) வீராசாமி செட்டியார், 

          ஈ) ஆ. சிங்காரவேலு முதலியார்


92. ஈசனோடாயினும் ஆசை யறுமின்கள் என்று கூறியவர்?


          அ) திருஞான சம்பந்தர், ஆ) பட்டினத்தார், இ) குணங்குடி மஸ்தான், ஈ) திருமூலர்


93.பாண்டிய நாட்டிலும் சோழநாட்டிலும் நிலவிய சில வழக்காறுகளையும்                         உச்சரிப்புகளையும் குறிக்கும் மலையாள நூல்?


          அ) தந்திர வார்த்திகா, ஆ) லீலாதிலகம், இ) இராமசரிதம், 

            ஈ) இவற்றுள் எவையுமில்லை.


94. இவற்றுள் வினையெச்ச வாய்ப்பாடு எது?


          அ) வந்து, ஆ) உண்டு, இ) சென்று, ஈ) செய்து.


95. ஓரடியுள் சொற்களை மாற்றியமைத்துப் பொருள் கொள்வது?


          அ) மொழிமாற்று, ஆ) கொண்டுகூட்டு, இ) நிரனிறை, ஈ) அடிமறிமாற்று


96. ஏ. தாழ்ந்த தமிழகமே என்பது யாருடைய படைப்பு?


          அ) அண்ணா, ஆ) பெரியார், இ) கவிஞர் சுரதா, ஈ) பாரதிதாசன்.


97. அகநானூற்றில் 2, 8 எண் கொண்ட பாடல்கள் எத்திணைப் பாடல்கள்?


          அ) முல்லை, ஆ) நெய்தல், இ) குறிஞ்சி, ஈ) பாலை


98. உலக நிலையாமையை எடுத்துக்காட்டும் நீதி நூல்?


          அ) திரிகடுகம், ஆ) ஆசாரக்கோவை, இ) ஏலாதி, ஈ) முதுமொழிக்காஞ்சி


99. அடிகள் நீரே அருளுக என்று கூறியவர்?


          அ) கோவலன், ஆ) மாடலன், இ) சாத்தனார், ஈ) இளங்கோவடிகள்


100. தொல்காப்பியப் பொருளதிகார இளம்பூரணர் உரையை முதன்முதலாகப் பதிப்பித்தவர்


        அ) சி.வை.தா., ஆ) உ.வே.சா., இ) ஆறுமுகநாவலர், ஈ) வ.உ.சிதம்பரம்பிள்ளை


101. சங்ககாலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடிய புலவர்களின்                             எண்ணிக்கை?


          அ) பதின்மர், ஆ) ஐவர், இ) ஒருவர், ஈ) நால்வர்


102. கனவு நலிபு உரைத்தல் எதன் விரி?


          அ) வரைதல் வேட்கை, ஆ) இரவுக்குறி, இ) பகற்குறி, ஈ) குறைநயப்பித்தல்.


103. பின்வருவனற்றுள் அச்சம் என்னும் மெய்ப்பாட்டிற்கான நிலைக்களம் எது?


          அ) பிணி, ஆ) பாம்பு, இ) இறை, ஈ) உறுப்பறை


104. எழுத்தோரன்ன பொருள் தெரி புணர்ச்சிக்குச் சான்று?


          அ) அனிச்சம், ஆ) நொச்சி, இ) செம்பருத்தி, ஈ) மல்லிகை


105. வீரமாமுனிவர் யாரிடம் தமிழ் பயின்றார்?


          அ) தாண்டவராய முதலியார், ஆ) சுப்ர தீபக்கவிராயர், இ) விசாகப் பெருமாளையர்,                 ஈ) முத்துச்சாமிப்பிள்ளை


106. நயத்தல் கூட்டல் கூடல் வேட்டல் என்பவை எதன் வகைகள்


          அ) பாங்கர்கூட்டம், ஆ) பாங்கியர் கூட்டம், இ) பாங்கிமதி உடன்பாடு, ஈ)                                 இடந்தலைப்பாடு


107. கருங்கோள் குறிஞ்சிப்பூக்கொண்டு பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே...                 மேற்காணும் பாடல் அடிகளில் உள்ள பொருள் யாது?


          அ) வெளிப்படை உவமை, ஆ) உள்ளுறை, இ) இறைச்சி, ஈ) உறுதிப்பொருள்


108. பீடுகெழு குரிசலும் ஓர் ஆடுகளமகனே.. என்ற பாடலைப் பாடியவர்?


          அ) ஒளவையார், ஆ) ஆதிமந்தியார், இ) நக்கீரர், ஈ) மோசிகீரனார்.


109. வண்ணச்சினைச் சொல் அமைய வேண்டிய முறை


          அ) அடை, சினை, முதல் ஆ) சினை முதல் அடை, இ) முதல் சினை அடை, 

            ஈ) அடை முதல் சினை


110. தமிழுக்கே உரிய ஐந்து எழுத்துகள்


          அ) ஆ, ஈ, ஊ, ஏ, ஓ,  ஆ)ற ன ழ எ ஒ,  இ)க ச ட த ப, ஈ) ய ர ல வ ள

Friday, October 22, 2021

யாப்பருங்கலக் காரிகை

 https://drive.google.com/file/d/0B7b5l4V_Mx0gaU9CT3dRSmR3RFhQSTdia01WczVmQ3k3eXlB/view?usp=sharing&resourcekey=0-X57t-bh_-6Kt-YtkzXHirw

 

மேற்கண்ட இணைப்பைப் பயன்படுத்தி வினா - விடைகளைக் கோப்பாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தமிழ் மொழி வரலாறு - தெ.பொ.மீ

https://drive.google.com/file/d/0B7b5l4V_Mx0gNzVfbllaZTFUakZtTmxGTF8tWnFDNU53S0NZ/view?usp=sharing&resourcekey=0-rdhpss9a0NGfOsX7c_firw

 

மேற்கண்ட இணைப்பைப் பயன்படுத்தி வினா - விடைகளைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


 

 

Thursday, October 21, 2021

தமிழ் கவிதை வரலாறு

 தமிழ் இலக்கிய மரபானது பல்வேறு இலக்கிய வகைகளைக் கொண்டுள்ளது. சங்க இலக்கியம், நீதி இலக்கியம், பக்தி, காப்பியம், சிற்றிலக்கியம், உரைநடை கவிதை, நாவல், சிறுகதை என்று தனக்கான இலக்கியப் பாரம்பரியத்தைத் தன்னகத்தே கொண்டுள்ளது. தமிழ் கவிதை மரபானது காலந்தோறும் படைப்பிலக்கிய வகைகளுள் ஒன்றாகத் திகழ்கிறது.

    செய்யுள் என்பது இலக்கிய வகைகளின் வடிவமாகத் தொடக்க காலந்தொட்டே தமிழ் இலக்கியத்தில் இடம்பெற்ற நிலையில் கவிதை என்ற சொல்லாடல் அது மரபுக்கவிதை புதுக்கவிதை என்ற நிலைகளில் தனக்கான புதிய சொல்லாடல்களைக் கொண்டு படைப்பிலக்கிய களனில் தன்னை அமைத்து கொண்ட போக்கு தமிழ் கவிதையியலைப் புரிந்துகொள்ள வழிகோலும்


தமிழ் வடிவ மரபு

காலந்தோறும் பொருண்மையின் மாற்றத்திற்கேற்ப இலக்கிய வடிவத்திலும் மாற்றத்தைக் கொண்டு தமிழிலக்கியம் பயணிக்கிறது. அந்த நெடிய வரலாற்றை அறிந்துகொள்வது இத்தொடர்பில் கவிதையைப் புரிந்துகொள்ள உதவும்.

சங்க இலக்கியம் - ஆசிரியம்

பதினெண்கீழ்க்கணக்கு - வெண்பா

காப்பியம், பக்தி - விருத்தம்

சிற்றிலக்கியம் - விருத்தம், துறை, தாழிசை, கலிவெண்பா


என்ற நிலைகளில் தமிழ் இலக்கியமானது பல்வேறு யாப்பு வடிவங்களை முதன்மைபடுத்தி காலத்தின் தேவைக்கேற்ப அதன் வடிவத்திலும் மாற்றங்களைப் புகுத்திக் கொண்டு வந்துள்ளது. 18,19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மேலைநாட்டினர் வருகை அச்சு மரபு தமிழ் சமூகத்தில் பெருத்த மாற்றத்தை ஏற்படுத்திய நிலையில் உரைநடை தோற்றம் பெற்ற சூழல் இங்கு, கவிதை, கட்டுரை, சிறுகதை, நாவல் போன்ற மேலைநாட்டு இலக்கிய வடிவங்களும் தோற்றம் பெறுகின்றன. இந்தப் பின்புலத்தில் இருந்து மரபுக்கவிதை, புதுக்கவிதை என்ற கவிதை குறித்த சொல்லாடல்கள் உருப்பெறுகிறது.

Tuesday, March 23, 2021

 பக்தி இலக்கியம் - 19 (22.03.2021)https://forms.gle/88pDGXF25h4r2QcTA

பக்தி இலக்கியம் - 20 (23.03.2021) https://forms.gle/GQbHh16EKTgbd7Mz6

சங்க இலக்கியத் தேர்வு 4 (07.03.2020)

 https://forms.gle/qdTcgRoqhG64rkvT9

தமிழ் இலக்கிய வரலாறு


 

  


 பக்தி இலக்கியம் - 6 (20.03.2021) 

  https://forms.gle/jeWBHXL6aFh3L2E89 

 

  பக்தி இலக்கியம் - 5 (19.03.21) 

   https://forms.gle/DtDmvuuxpeiQioG5A 


   பக்தி இலக்கியம் -4 (18.03.2021)  

   https://forms.gle/nZoPMvXwKsaVHY6J6 

 

  பக்தி இலக்கியம் -3 (17.03.2021)

  https://forms.gle/2DYWPQs2KxQ3Z5TM6 

 

   பக்தி இலக்கியம் -2 (16.03.2021) 

   https://forms.gle/iD5T92p1ziiX9yfL8


   பக்தி இலக்கியம் -1 (15.03.2021) 

   https://forms.gle/9nzaH2bnAkE3AHQy5


   கீழ்க்கணக்கு - 2 (14.03.2021)

   https://forms.gle/NsWZW9E8Yf5DFS9AA 


   கீழ்க்கணக்கு - 1 (13.03.2021)

   https://forms.gle/soNwh6ngh7KLpMdN9


   காப்பியத் தேர்வு -3  (12.03.2021)

    https://forms.gle/Vyq1XHKKnqx8bP6w6


    காப்பியத் தேர்வு -2 (11.03.2021)

    https://forms.gle/GwAQwRZHeveSauuU6    

 

காப்பியத் தேர்வு -1  (10.03.2021)

    https://forms.gle/G1fSp15Sxiuxx8Hu6


சங்க இலக்கியத் தேர்வு -6 (09.03.2021)

https://forms.gle/nmWnq3cqvdakdaCr6


சங்க இலக்கியத் தேர்வு -5 (08.03.2021)

 https://forms.gle/BG55vpuKh7qgPrL29


சங்க இலக்கியத் தேர்வு 4 (07.03.2020)

https://forms.gle/qdTcgRoqhG64rkvT9


சங்க இலக்கியத் தேர்வு 3 (06.03.2021)

https://forms.gle/qBqqu8XkjmRRxMPZ9


சங்க இலக்கியத் தேர்வு-2 (05.03.2021)

https://forms.gle/VK9tntrp5WW92pBr5


சங்க இலக்கியத் தேர்வு -1 (04.03.2021)

https://forms.gle/pDGMJ5J7AaGV9m1DA

UGC NET Tamil TNPSC Tamil

அணியிலக்கணத்தில் யாப்பிலக்கணத்தின் செல்வாக்கு

தமிழ் இலக்கண மரபானது எழுத்து, சொல், பொருள் என்ற மூன்றிலக்கண மரபிலிருந்த எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்ற ஐந்திலக்கண மரபாக வளர்ச்சி...